13. ஒரு இறைநம்பிக்கையாளருக்கு தன் வாழ்வின் அனைத்து அம்சங்களும் நன்மையாகவே அமைகிறது

ஒரு இறைநம்பிக்கையாளருக்கு தன் வாழ்வின் அனைத்து அம்சங்களும் நன்மையாகவே அமைகிறது. இறைநம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ் سبحانه وتعالى அளித்த மாபெரும் அருட்கொடை. அல்ஹம்துலில்லாஹ்


“இறைநம்பிக்கையாளரின் நிலையைக் கண்டு நான் வியப்படைகிறேன். அவரது (வாழ்வின்) அனைத்து அம்சங்களும் (அவருக்கு) நன்மையாகவே அமையும். இறை நம்பிக்கையாளருக்கு அல்லாமல் வேறெவருக்கும் இ(ந்தப் பாக்கியமான)து கிட்டுவதில்லை. அவருக்கு ஏதேனும் மகிழ்ச்சி ஏற்பட்டால், அவர் நன்றி செலுத்துகிறார். அது அவருக்கு நன்மையாக அமைகிறது. அவருக்கு ஏதேனும் துயரம் நேர்ந்தால், அவர் பொறுமை காக்கிறார். அதுவும் அவருக்கு நன்மையாக அமைந்துவிடுகிறது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸுஹைப் (ரளியல்லாஹு அன்ஹு)
நூல்: அஹ்மத் 23292
Share the khair (جزاك الله خيرا كثيرا 💐).
http://t.me/IslamicRemindersTamil
fb.com/Islamicreminderstamil/

Comments